Scarlet Johansson
அயோனி –சீதை –கேள்விகள் –நியீட்ஷே –வளர்மதி –பைத்தியக்காரன் –இட்லிவடை!?
திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று.
யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும், உன் ப்ளாக்கையெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல ஒரு வார்த்தைக்கு முன்னாடி அ- போட்டா அது அந்த வார்த்தையோட எதிர்ப்பதம்னும் தெரியும்.(புனைவு – அபுனைவு உதாரணம் சொன்னான்). அப்படின்னா சீதை யோனியில்லாதவள்னு அர்த்தமான்னு கேட்க, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
நான் சொன்னேன், ஒரு விஷயத்தை எக்ஸாக்ட்டா எப்படி தப்பா சொல்றதுன்னு உன்கிட்டத்தான் கேட்கணும் போலிருக்கு. அயோனின்னு சீதையைச் சொல்வாங்கங்கிறது சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் சீதை யோனியில்லாதவள் என்பதல்ல, சீதை யோனியின் வழியாய் பிறக்காதவள் என்பதுதான். ஏன் என்றால் சீதை அம்மா – அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன். என்னத்தையோ நினைத்து வந்து என்னமோ கிடைத்த விரக்தியில் நகர்ந்தான்.
நான் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட கேள்விகள் கேட்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன், பள்ளிக்கூடங்களிலும் சரி கல்லூரிகளிலும் சரி எனக்கு பாடம் நடத்துவது அத்தனை சுலபமானது கிடையாது. தற்சமயங்களில் வேலை செய்யும் நிறுவனத்தில் கூட ‘செஷன்’ என்று கூட்டிச்சென்றாலோ ‘டிரைய்னிங்’ கொடுத்தாலோ அதிகம் கேள்விகள் கேட்பவனாகயிருந்திருக்கிறேன். கேள்விகள் ஒரு வியாதி போல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்திருக்கிறது. சில சமயங்களில் வெறுமனே கேட்கவேண்டுமென்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு மோசமான அனுபவங்கள் நான் கேள்விகள் கேட்டதால் நடந்திருக்கிறது.
புத்தர் நான்கு வகைகளாகக் கேள்விகளைப் பிரிக்கலாம் என்கிறார், நேரடியாக பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், விளக்கத்துடன் பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், எதிர்கேள்வி கேட்பதன் மூலம் பதில் சொல்ல கேள்விகள், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று. உண்மைதான் கேள்விகளுக்கும் நான்கு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு போலிருக்கிறது, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உணர்வின் மேல் நியீட்ஷே எழுப்பும் கேள்விகள் கூட நான்கு தான்.
<span style=”font-weight:bold;”>You run ahead? Are you doing it as a shepherd? Or as an exception? A third case would be the fugitive.
Are you genuine? Or merely an actor? A representative? Or that which is represented? In the end, perhaps, you are merely a copy of an actor.
Are you one who looks on? Or one who lends a hand? Or one who looks away and walks off.
Do you want to walk along? Or walk ahead? Or walk by yourself? One must know what one wants and that one wants. </span>
Questions of Conscienceவில் நியீட்ஷே கொடுக்கும் நான்கு கேள்விகளுக்குமான பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு விடையளிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமானவை. நியீட்ஷேவைப் பற்றி நினைத்தால் சட்டென்று நினைவுக்கு வருவது ’வளர்மதி’ தான்.
ஒருமுறை பைத்தியக்காரன், வளர்மதி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததையும் அதற்கு காரணம் நியீட்ஷே தான் என்று சொன்னதையும் நான் நிச்சயம் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை தான். ‘ஒரு கேள்வி’ என்னை ஆட்டிப் படைத்திருக்கிறது, அது எந்தக் கேள்வி என்பது அல்ல இங்கே பிரச்சனை கேள்வியால் மனிதனை ஆட்டிப் படைக்க முடியாமா என்பது, அப்படியென்றால் முடியுமென்பது தான் பதிலாய் இருக்க முடியும்.
வளர்மதி, நியீட்ஷேவைப் படித்துவிட்டு நியீட்ஷே கேட்ட ஒரு கேள்வியால் அப்படி பாதிக்கப்பட்டதால் சாப்பிடாமல் கொள்ளாமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொன்ன நினைவு உண்டு. எந்தக் கேள்வியென்று அத்தனை சுலபத்தில் நினைவிற்கு வரவில்லை என்றாலும் ‘மையமாக’ இப்படி இருந்தது. இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா என்பது தான் அந்தக் கேள்வி. வெண்ணைவெட்டியாய் இதற்கான பதிலை எதையும் யோசிக்காமல் ஆம் என்று சொல்ல வேண்டாம். இந்தக் கேள்வி எழுப்பும் அதிர்வு நிச்சயம் இல்லை என்று சொல்லவைக்கும். யாருக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இல்லாமல் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள முயலுங்கள். என் பதில் இல்லை என்பதை நான் அப்பொழுதே வளர்மதியிடம் சொன்னேன்.
அப்படியென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன?
‘மையம்’ என்றதும் சுஜாதா மையமாக வந்து என் கியூப்பிக்கில் மேல் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு வளைந்த முதுகுடன் சிரிக்கிறார். நான் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள் சுஜாதாவினுடையவை, அந்துமணியில் இருந்து தான் இது தொடங்கியது. பின்னர் மதன், அரசு என்று பலவாறு தொடர்ந்து இன்றும் இணையப்பக்கங்களில் எழுதும் லக்கிலுக் வரை தொடர்ச்சியாய் கேள்வி பதில் படிக்கிறேன். ஜெயகாந்தன் பதில்கள் மட்டும் சட்டென்று ஒரு எரிச்சலை உண்டாக்கும் இவரிடம் போய் கேள்வி கேட்கிறாங்க பாருங்க என்று, ஒரு வேளை அவர் எதிர்பார்ப்பது கூட அதுவாகத்தான் இருக்கும்.
கேள்வி என்றதும் நினைவிற்கு வரும் இன்னொரு நபர் ’தெரிதா’. அவர் எழுப்பும் <span style=”font-weight:bold;”>‘must not structure have a genesis, and must not the origin, the point of genesis, be already structured, in order to be the genesis of something?’</span> இந்தக் கேள்வி உள்ளிட்டு அவருடைய எழுத்து கேள்விகளால் நிரம்பியதாக இருக்கிறது.
Interviewக்களால் நிரப்பப்பட்ட சாஃப்ட்வேர் வாழ்க்கையில் நான் கேள்விக்கான பதில் சொல்வதை ஒரு விளையாட்டாக விளையாடத் தொடங்கியிருந்தேன் ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல், என் பதிலின் மூலம் எனக்கான கேள்விகளை அவர்கள் வாயில் புகுத்தி ஆடும் இந்த விளையாட்டு எனக்கு தொடர்ச்சியாக வெற்றியையே பெற்றுத்தந்தது.
கேள்விகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன, எதைப் பற்றியாவதும். தொடர்ச்சியாக கேள்வியாகவே இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் தருணம் விளக்கிவிடமுடியாததாய் இருக்கிறது. பதிவுலகில் முகமூடியில் உலாவரும் இன்னொரு ‘க்ரூப்’ இட்லிவடை தன் முகமூடியை கழட்டி எறிய திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததும் அந்த உணர்வுதான் வந்தது. முகமூடிகளை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இணையத்தில் மனநிம்மதியுடன் வாழ வழி என்று தெரிந்தாலும், எலி எப்பொழுதும் புலியாவதில்லை என்று தீர்ப்பு வைத்த திருமுகத்தைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. என்னவென்றாலும் இட்லிவடை கேள்வி பதில் இல்லாமல் தான் ‘சுழற்றிக்’ கொண்டு நிற்கும் என்று தெரிவதால், Ignorance is a bliss.

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு
இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் – குறுநாவல் – சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ‘அடல்ஸ் ஒன்லி’ விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.
ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.
மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு “எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.” சீரங்கத்தம்மா போல், “அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.
புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.
“… தினசரியில் ‘சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் ‘சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது…” புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.
முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.
“…எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி…”
பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,
“…இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், ‘இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், ‘சரிதான் உட்காருடா’ என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்…”
எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், ‘புலிநகக்கொன்றை’ போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் ‘நாவல்’களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் ‘புளியமரத்தின் கதை’யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ ரமேஷ் – ப்ரேமின் ‘சொல் என்றொரு சொல்’ முதலானவற்றோடு ஒப்பிட்டே.
இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் ‘கிரேஸி’ மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக ‘கிழக்கு’ இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது ‘கிழக்கு’ உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா ‘ரெட்டைத் தெரு’ என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்
எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

சினிமா
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
’காதலில் விழுந்தேன்’
3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
காதல் – வீட்டில் – டிவியில் – இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை.
4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
குருதிப்புனல், மகாநதி – சட்டென்று நினைவுக்கு வந்ததும் மனது தானாய்ப் பதறும் இரண்டு படங்கள்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
என் காலம் இல்லாவிட்டாலும் பராசக்தி முதலான ‘திராவிட’ படங்கள் ஏற்படுத்திய தாக்கம்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு – குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, ஜீவா இவர்களின் படங்கள். இன்னமும் கூட நிறைய பேரைச் சொல்லலாம்.
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்ணில் படும் எல்லாவற்றையும்.
7.தமிழ்ச்சினிமா இசை?
கேட்பதுண்டு. பெரும்பாலும் புதிய படங்களின் இசையில் கைவைப்பதில்லை. எனக்கான பழைய – புதிய பாடல்கள் தொகுப்பு உண்டு. பிடித்திருக்கிறது – நன்றாயிருக்கிறது என்ற சொன்ன பிறகு கேட்பதுண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தற்சமயம் தமிழ் சினிமா எ உலக சினிமா 10 : 90 என்ற விகிதத்தில் உள்ளது. அதிகம் தாக்கிய படங்களின் வரிசை இந்தப் பதிவை விட நீண்டு விடும் என்பதால், குறிப்பாய் தற்சமயம் பார்த்து என் பதிவில் குறிப்பிடாத சில,
Perfume, Days of Glory(Indigழூnes), The golden pond, One flew over cuckoo’s nest, Mamma Roma, Oedipus Rex…
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகயிருக்கிறது. ‘ரே’ ‘கத்தக்’ அளவிற்கும் அதற்கு மேலும் பெயர் தரக்கூடிய படங்கள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.
பதிவு போட அழைத்த மதிக்கு நன்றி.
நான் அழைக்க விரும்புபவர்கள் – விருப்பமிருந்தால் போடலாம்.
1) பெயரிலி
2) ஹரன் பிரசன்னா
3) சன்னாசி
4) நண்பன் ஷாஜி
5) ஜமாலன்

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் – Children of a lesser God
வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் – பிரேமா, ராமசேஷன் – மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.
Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் ‘மொழி’ படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don’t tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.
ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் “she is one of the brightest students we ever had” என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.
அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே ‘லிப் ரீடிங்’ கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் ‘Sign language’ கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு ‘Sign language’ தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.
இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை ‘அவள் எப்படி இருக்கிறாளோ’ அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், ‘உதடுகளைப் படிக்க’ முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.
கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.
ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் ‘Sign’ செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.
ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக ‘Sign language’ கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் ‘Sign’ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை ‘Sign’உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.
இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.
வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப ‘ஷார்ப்’. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.
கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, “Hey you want to play stand up sit down again” விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் “Ohh careful, you almost smiled”ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், “Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love” வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.
ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ “He doesnt think you stupid, he thinks you a deaf.” என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், “Only stupid hearing people thinks that deaf people are stupid” என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.
ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், “Can you feel it?”ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் “vibrations…” “…through my nose” என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.
ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் ‘இப்ப என்ன செய்வ’ என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.
தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.
ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.
தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.
“Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined.”
என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

அகிலா கதைகள் அறுபத்தைந்து
“சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?”
அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.
“ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?”
“உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?”
“இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை”.
“ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?”
நான் மௌனமாயிருந்தேன்.
“பதில் சொல்லுங்க சார்.” கத்தினாள் மறுமுனையில்
“ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்.”
கேட்டவள் சிரித்தாள்.
“ஏண்டி சிரிக்கிற!”
அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு “உங்கக்கிட்ட ‘ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்’ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி.”
எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே “ம்ம்ம்” என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.
“என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.
நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.
சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.
சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி…”
சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.
“…ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.
என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்.”
சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.
———————
Mohandoss’s new status message – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்
* தொடர்கதையாக ஆக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஆகாது போலிருக்கு.

அகஅ –அன்புள்ள அகிலாவிற்கு
எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.
Mohandoss’s new status message – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்
அகிலா கதைகள் அறுபத்தைந்து
என் எழுத்தைப் படிக்க முடியாதவர்களுக்கு…
அன்புள்ள அகிலாவிற்கு,
நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.
காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!
அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் ‘வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ’ அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.
வருகிறேன்
காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி விமர்சனம் எரிச்சலைக் கிளப்பியது. அதனால் இரண்டு டிவிட்டு டிவிட்டி விட்டு ஓய்ந்தேன். என் நல்ல நண்பர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகயிருக்கிறது, அவர் அளித்த பேச்சுலர் பார்ட்டியில் இருந்து பாதியில் தப்பித்து வந்து ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்தேன்.
நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான், ஒரு காக்க காக்கவையோ, வேட்டையாடு விளையாடுவையோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் படம் அப்படியில்லை. ஆனால் நான் ரசிக்கக் கூடிய அளவிற்கு படமிருந்தது. இதற்கு மேல் கதை ஆங்காங்கு தட்டுப்படலாம். அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.
படம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு பின்னர் அசாதாரணமாக நகர்ந்தாலும் கடைசி வரையிலும் சாதாரண மனிதர்களையே தூக்கிப் பிடிப்பதால் பரவாயில்லை. நான் சொல்லவருவது அப்பா கேரக்டரை, இந்தக் கேரக்டரின் காதல் காட்சிகள் தவிர்த்து மற்றவைகள் பரவாயில்லை ரகம். சூர்யாவின் முதல் காதல் ஒவ்வொரு ‘சிறுகதை ஆசிரியர்’ன் கனவிலும் வந்து போயிருக்கக்கூடிய ஐஸ்கிரீம் காதல், அந்தப் பெண் அழகாக இருக்கிறாள், அழகாக சிரிக்கிறாள், ரொம்ப நாள் கழித்து எனக்கு ஒரு சினிமா ஹீரோயின் பிடித்துப் போயிருக்கிறாள். இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை – மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்.
அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.
சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் நன்றாகத் தெரிகிறது, அதுவும் முதல் காதலின் பொழுது – அந்தப் பெண் தன் காதலைச் சொன்ன பிறகு, நல்ல முன்னேற்றம். சிக்ஸ் பேக்ஸ் காண்பிக்கிறார், ஆர்மி உடையில் கச்சிதமாகப் பொறுந்துகிறார். வயதான கெட்டப்பில் கொஞ்சம் மேக்கப் பிசிறு தட்டினாலும் ‘தசாவதாரம்’ அளவிற்கு இல்லை. உடம்பைக் குறுக்கி கண்களைக் குறுக்கி உடல் மொழியை மாற்றி நன்றாகச் செய்திருக்கிறார்.
படத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், கமர்ஷியலாக இந்தப் படம் பெயிலாகாமல் இருக்கச் செய்திருக்கிறார்கள் என்று தள்ளி வைத்துவிடலாம். நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, ப்ரீஸ் செய்யும் பொழுது பிசிறு தட்டுவது தெரிகிறது என்ன பிரச்சனை? கௌதம் மேனனின் ரிச்னஸ் பாதி படத்தில் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை தெரிந்தே செய்தார்களா தெரியாது. இடையில் திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.
மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் தட்டியிருக்கலாம், முதல் நாள் என்பதால் ஓட்டினார்களாயிருக்கும். நாளையிலிருந்து ஆப்பரேட்டர் கைவைத்துவிடுவார். ஆனால் கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், எப்படா இண்டர்வெல் விடுவார்கள், எப்படா முடிப்பார்கள் என்று இருந்தாலும் இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.
இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.

மலரினும் மெல்லிய காமம்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
புணர்ச்சிவிதும்பல் – காமத்துப்பால் – திருவள்ளுவர்
அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.
நான் நேரடியாய் அவளிடம் “ஜெயா சாரி, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ.” சொன்னதும் தான் தாமதம்.
“அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்க, இன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?”. அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.
“எதுக்கு ட்ரீட்.” எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.
“உங்களுக்குத் தெரியாதா?” இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.
“ஏன் நீ தான் சொல்லேன்” அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.
“defloration” பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், “அப்படியா?” என்று கேட்க அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லை, நான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.
ஜெயஸ்ரீ, “ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!”
—————————
நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்
—————————
“கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.” என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.
நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம், என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லை, அவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள், பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள், நான் பயந்தது எங்கே சென்று பின் சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான், நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள், அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.
“ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுது, இப்பல்லாம் நீ என்ன நினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?”
எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.
“இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?”
பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.
“ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!”
என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, அவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,
“ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?” என்றாள்.
அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள், மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப் பேசியிருப்பேன், வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை, அதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லை, அதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம் விட்டதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.
அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால், உண்மையிலேயே வலித்தது. நான் “அம்மா” என்று கத்தினேன் தொடர்ச்சியாய்.
“நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது” கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.
“நான் சரிங்க மேடம்” என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்து, சப்தமாய் சிரித்தாள்.
“எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீ, இன்னும் இரண்டு நாளைக்கு? அப்புறம் ‘சீ’ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?” என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்தது, ப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால், அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.
“இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?’
சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,
“என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியா? ஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?”
இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்து, அவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன், ஒன்றும் உதவவில்லை.
“ச்ச, சூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!” என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லை, முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.
நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம், இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,
“அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!” என்றேன்
“சரி” என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்தது, ரொம்ப தீவிரமாய் இரண்டு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால் விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லை, அவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியது, பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத் தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள், அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்தது, பெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள், வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், “நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவ வந்திருக்கீங்களோ?!”
அவள் கண்களில் சில்மிஷம் இல்லை, ஆனால் நான்,
“வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!” இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,
“ம்ம்ம் நம்பிட்டேன்” என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள்.
நான் பரிதாபமாய் “அகிலம் நான் பொய் சொல்லலை, உண்மையிலேயே இதான் மொத தடவை ஒரு பொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு”.
அவள் கொஞ்சம் இறங்கிவந்து, “ச்ச சும்மா சொன்னேன் தாஸ், உன்னைத் தெரியாதா?” என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.
“ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்ல, நான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!” கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.
ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டு ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்தது, வயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்தது, திரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை.
அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வு, கதவுக்குப் பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள், வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.
“உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?” கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள், என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.
“அகிம்மா, எனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும், நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!”
அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள், பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள், ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன், திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள், அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.
நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள், அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தன, என் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கி அமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியது, அது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.
“தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?” முடிந்தது, இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றன, அவள் கைகளை விடுவித்தேன், அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும், இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும், என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, ‘ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்’ என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லை, நானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லை, நான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.
கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன், மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள், ஹமாம் சோப்பின் மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூட, அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடி ஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன், அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.
“மணி என்னாகுது தெரியுமா?” எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது, என்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது, தேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.
“சாரி! நல்லா தூங்கிட்டேன்.”
“இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா ‘இப்ப வாண்டாம்’னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?”
நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.
“லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீ, என்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்.” கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள், காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்று கொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயல, அவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி, இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்று மல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.
மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள், மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல், அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்தது, அவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.
“இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?”
அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள், நான் நினைத்தேன், இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டது, பந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப் போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது, என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்தது, இந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், ‘அபிராமி அந்தாதி’ பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால், பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும், அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.
நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லை, என்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.
“Doss I don’t want to get pregnant” சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான் நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.
“Don’t worry I have condoms” சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும், இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள், கனவு போல் இருந்தது.
அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், ‘பசிக்குது தாஸ்’ என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும் பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள், சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும், நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.
அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின், உணர்ந்து “you already came is it?” கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.
“என்ன அதுக்குள்ளையே கனவா?” என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,
“இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லை, இந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்.”
ஒரு அடி பின்னகர்ந்தவள், கைகளை இடுப்பில் வைத்தபடி, “அப்ப நான் வேணாமா?” கேட்க, இதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,
“என்ன விட்டுடு தாயி!” என்றேன்.
நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம், அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள், வெட்கப்பட்டு சிரித்து,
“தாஸ் அவதான் போன் பண்ணுறா, அவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க.” சொல்லி என்னிடம் திணித்தாள்.
நான் “ஹலோ!” என்று சொல்ல,
மறுபுறம் ஜெயஸ்ரீ, “நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட.”
நான் தீவிரமாய், “அவள் இங்க இல்லை ஜெயா” என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.
“சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களா? அவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.
வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் “ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிற, பச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு” என்று ஆரம்பித்தாள்.
“ஆமாம்!” “ஒரு தடவை தான்” “ம்ம்ம்” “ம்ம்ம்னு சொல்றேன்ல” “தாஸ்கிட்டையே கேளேன்” என்று சொல்லி மீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.
“இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது, மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?”
நான் வெறுமனே “ம்ம்ம்.” என்றேன்.
“இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!” அவள் சொன்னதும் தாமதம்.
“நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!” உளறிக்கொட்டியிருந்தேன்.
அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், நான் சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.
ஜெயஸ்ரீ, “அக்காகிட்ட போனைக் கொடுங்க…” நான் அகிலாவிடம் கொடுத்தேன்.
இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள், எனக்குப் புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லை, சிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.
“சாரி ஏதோ உளறிட்டேன்!” மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.
அவள் சப்தமாய் சிரித்தபடி, “இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க” என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.
“அகிம்மா சாரி I didn’t mean it. மன்னிச்சிக்கோம்மா” சொல்ல அவள்,
“ச்ச தாஸ், என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க.”
போன உயிர் திரும்ப வந்தது.

I lost my virginity to Mohandoss
- வெகு நிச்சயமாய் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் -
Akilandeswari – Google chat status – Public
I lost my virginity to Mohandoss
எனது Buzzல் வந்து விழுந்த அகிலாவின் இந்த அப்டேட் என்னை கொஞ்சம் நகர்த்திப் பார்த்தது. அவள் அப்படிப் பொதுவெளியில் சொல்வதில் எனக்குப் பிரச்சனையில்லை தான், அவள் இந்த முடிவை முட்டாள்த்தனமாக எதையோ யாருக்கோ நிரூபிப்பதற்காக மட்டும் எடுத்திருக்கக்கூடாது என்று வருந்தினேன். அதன் பின்னர் தான் இனி யாருக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற யோசனை எழுந்தது, என்னையும் அவளையும் தெரிந்த – அவள் ஸ்டேட்டஸ் மெஸேஜ் ரீச் ஆகயிருக்கக்கூடிய – நபர்கள் என் அலுவலகம் முழுதும் இருந்தார்கள். என் ஜூனியரிலிருந்து, என் ப்ராஜக்ட் மேனேஜர், இந்தியா சீஃப் இப்படி. கொஞ்சம் பேருக்கு எங்களைப் பற்றித் தெரியுமென்றாலும் சமுதாயம் கல்யாணத்திற்கு முன்னான உறவைப் பற்றி வைத்திருக்கும் சித்திரம் எனக்கு கவலையளித்தது. என்னை விட அகிலாவை அது பாதிக்கும் என்றே நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதைச் செய்திருக்க வேண்டாம் என்ற எண்ணமும் எழுந்தது.
10:30 AM aeswari: how is it???
me: ஏன்டீ இப்படி செஞ்ச
aeswari: நேத்தி நம்பினேன்னு சொன்ன
அதாவது நான் வெர்ஜினா இருந்தேன்னு
me: நீ உதைபடப்போற
aeswari: ஏன் உண்மையைத்தான சொன்னேன்
10:32 AM me: Im not talking abt tht.
10:35 AM aeswari: சரி என் டெஸ்க்குக்கு வாயேன்.
வெண்பட்டு சேலையணிந்து, கண்ணுக்கு மை எழுதி மஸ்காரா போட்டு, புருவங்களுக்கு மத்தியில் இல்லாமல் கொஞ்சம் மேலே கொஞ்சம் பெரிதாய் கறுப்புப் பொட்டு வைத்து என்னை வரவேற்ற தேவதை தான் கொஞ்சம் முன்னர் என்னுடன் கன்னித்தன்மைப் பற்றிக் கதைத்தது என்று நம்பு முடியவில்லை தான்.
“சொல்லவேயில்லை அகிலா, ஹேப்பி பர்த்டே!” எனக்கு இன்றைக்கு அவள் பிறந்தநாள் இல்லையென்று தெரியும்.
அவள் நான் எதிர்பார்த்தது போலவே கண்டுகொள்ளவில்லை. “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தான் சேலையில் வந்தேன்.” என்று சொல்லி என்னை அழைத்து அவளுடைய gmail பக்கம் காட்டினாள், என்னையும் ஜெயஸ்ரீயையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் ப்ளாக் செய்துவைத்திருந்தாள்.
“நான் கூட நினைச்சேன் ரொம்ப தைரியம்தானுட்டு, போடி இவளே, அஞ்சு நிமிஷத்தில் எவ்ளோ பயந்திட்டேன் தெரியுமா?!”
“நீ மட்டும் என்னைப் பத்தி எப்படியெல்லாம் எழுதியிருப்ப, அதான் சும்மா விளையாடலாமேன்னு…” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய லாக்கரைத் திறந்து ஒரு டைரியை எடுத்தாள், முதலில் என்னுடையதோ என்று நினைத்தேன்.
“ஒரு விஷயத்தை இன்னிக்கே நான் உன்கிட்ட சொல்லணும், அதை மறைக்கக்கூடாது. ஆனால் இவ்வளவு நாளா உன்னப்பத்தி வராத ஒரு நம்பிக்கை இப்பத்தான் வந்திருக்குன்னு வைச்சிக்கோயேன். ஆனால் இந்த டைரியைப் படிச்சிட்டு என்னைப் பிடிக்கலைன்னாலோ இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னாலோ சொல்லிடு நான் தப்பா நினைக்க மாட்டேன். இதைப்படிச்சா தெரியும் எவ்வளவு பர்ஸனலான விஷயம் சொல்றேன்னு அதனால் சீக்ரஸி முக்கியம். புரிஞ்சிக்க”
கைகளில் இருந்த டைரி ஒரு மாயப்புத்தகம் போல் தோற்றமளித்தது, இத்தனைக்கும் பிறகு அவளை நான் வெறுக்கக்கூடிய அப்படியென்ன விஷயம் இந்த டைரிக்குள் இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அகிலா இத்தனை தூரம் சொன்னதால் என்னதான் இருக்கும் என்று படிக்கநினைத்தேன்.
“There are lots of personal information not only about mine, but about my entire family, I know I can trust you, but you should know that too.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
நான் சட்டென்று, “அகிலா உன்னை வெறுக்கிறதைப் போல் உன்னிடம் எதுவும் இருக்க முடியாதுன்னு தெரியும். நீ என்கிட்ட இதைக் கொடுக்க நினைத்ததையே நான் பாஸிடிவ்வா எடுத்துக்கிறேன். நான் இதைப் படிக்கலையே!”
உளறினேன்.
“இல்லை பரவாயில்லை நீ படிச்சித்தான் ஆகணும், after reading this if you cant keep it with you, I am fine.” மேலும் சீண்டினாள். நான் பதிலெதுவும் சொல்லாமல் டைரியுடன் நகர்ந்தேன், என்னை அகிலாவை வெறுக்கும் படி செய்ய அப்படி என்ன இருக்க முடியும் என்ற கேள்வியுடன்.
தாஸ்,
நான் இதுவரைக்கும் உன்கிட்ட என் ஃபேமிலி பத்தி பெரிசாச் சொன்னதில்லை, நீயும் கேட்டதில்லை. ஜெயஸ்ரீயை பத்தி மட்டும் உனக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம், அதுவும் எத்தனை தூரம் அவளுடன் ஒத்துப் போகக்கூடியதுன்னு எனக்குத் தெரியாது.
காதலிக்கிறப்ப இதப்பத்தில்லாம் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லைதான், நானும் உன்னை இப்ப நம்புறது போல நம்புறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கிட்ட எதையும் மறைக்கணும்னு நான் நினைக்கலை. இப்ப நான் சொல்ற விஷயத்தை எல்லாம் நாம சாட் பண்றப்பவே ஏன் சொல்லலைன்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்ட பதில் கிடையாது, அதே மாதிரி நீ இதைப் படிச்சிட்டு இதைப்பத்தி கேக்கப்போற எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை.
எங்க அப்பா ஒரு குடிகாரன், சாரி உனக்கு சட்டுன்னு ’ன்’ போட்டுப் பேசுறதால படிக்கிறதுக்கு கஷ்டமாயிருக்கலாம், ஆனா என்னால வார்த்தைக்காக கூட அவனை ‘ர்’ போட்டுச் சொல்ல முடியாது. எங்கம்மாவைப் பிடிக்காம எங்க தாத்தா வற்புறுத்தினாருங்கிறதுக்காக கல்யாணம் கட்டிக்கிட்டானாம், பாவம் எங்கம்மாவுக்கும் தாத்தாவை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாம கட்டிக்கிட்டிருக்காங்க. கல்யாண நாளிலிருந்து எங்கப்பன் சாகற வரைக்கும் எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. பாதி நாளு வேலைக்கே போனதில்லை, எங்கம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்கள வளத்தாங்க. அவங்க சம்பளத்தையும் அடிச்சி பிடிங்கி குடிச்சிருக்கான் படுபாவி. அதுகூட பரவாயில்லை குடிச்சிட்டு வந்து தினம் தினம் எங்கம்மாவை எங்க கண்ணு முன்னாலையே அடிப்பான், தலையை சுவத்தில் கொண்டு மோதுறது, முகத்தில் கையை மடக்கி குத்துறதுன்னு தினம் தினம் எங்கம்மா முகம் கிழிஞ்சி தான் படுக்க வருவாங்க. நானும் ஜெவும் இதைப் பாக்காத நாளே இல்லை.
இதில எங்கம்மா மேல சந்தேகம் வேற, எவன் கூடவோ போய்ப் படுக்குறாங்கன்னு. உனக்கு எப்ப தாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் தெரிஞ்சிருக்கும், சுன்னி, புண்ட, கூதி, கண்டார ஓழி, தேவுடியா முண்ட இதெல்லாம். விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன் நான். எவன் கூடடி போய்ப் படுத்துட்டு வந்த, எந்த சுன்னிய ஊம்பிட்டு வந்தன்னு என் சின்ன வயசில கேக்காத நாளே இல்லை. நானும் சின்னப்பிள்ளைல சினிமா எல்லாம் பாத்துட்டு ஒரு நாள் அவன் திருந்திருவான்னு நினைச்சிருக்கேன். ம்ஹூம் அவன் திருந்தவும் இல்லை, எங்கம்மா படுற கஷ்டம் போகவும் இல்லை. என்ன இழவு காரணமோ தெரியாது என்னையும் ஜெவையும் ஒன்னுமே சொன்னது கிடையாது, திட்டினது கிடையாது. அவனுக்கு எங்கம்மா அடிக்கிறதுக்குத் தான் டைம் இருந்துச்சு.
நான் சொல்ல வந்தது இதையில்லை, ஆனா இதை இப்படித்தான் சொல்ல முடியுமாயிருக்கும். அதனால சொல்றேன்.
அப்புறம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது, தினமும் நைட் எப்ப செக்ஸ் வைச்சிக்கலாம்னு கேட்டு எங்கம்மாவை டார்ச்சர் செய்யறதை தினமும் கேட்டிருக்கேன். அவ்வளவு ப்ளைனா இல்லைன்னாலும் விஷயம் அதுதாங்கிற லெவலுக்குத் தெரிந்திருந்துச்சு. எவனோ ஒருத்தன் அவனோட அம்பது வயசுல குழந்தை பெத்திக்கிட்டதும், நானும் இப்பவும் ஆம்பளைன்னு நிரூபிக்கணும் குழந்தை பெத்துக்கொடுன்னு கொடுமைப் படுத்தினது கூட நினைவிருக்கு. அம்மா கருத்தடை ஆப்பரேஷன் செய்துக்கிட்டவங்க. அம்மா பாவம் வெளியில் போய் வேலையும் செய்திட்டு வந்து, சாப்பாடும் செஞ்சிக் கொடுத்துட்டு, நைட் அடியும் வாங்கிட்டு இவன் கூட காலங்காத்தால எங்களுக்குத் தெரியாமல் போய் படுத்துக்கணும். நான் அப்ப வயசுக்குக் கூட வரலை, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா அவங்க செக்ஸ் வைச்சிகப் போறாங்கன்னு தெரியும். அந்தாள் கேக்கம் போதும் எங்கம்மா வேணாம் வேணாம் கெஞ்சிறது கூட கேட்கும். ஆனா ஒரு நாள் கூட என்னால் முழிச்சிருக்கவோ, அவங்க என்ன செய்வாங்கன்னு கேக்கவோ பாக்கவோ முடிஞ்சதில்லை. நான் இதில் போய் பொய் என்ன சொல்லப்போறேன். ஆனா சில நாள் போதை அதிகமாகி அம்மாவை பொட்டுத் துணி கூட போடாம நிக்க வுட்டுப் பார்த்திருக்கேன். எதுக்குமே கலங்காத அம்மா அப்ப மட்டும் அழுதுக்கிட்டே கதவை சாத்திவிடச் சொல்லும், எங்களைத் திட்டி போய்ப் படுக்கச் சொல்லும், அழ வேண்டாம்னு சொல்லும். ஆனால் அந்த வயசுல முடியாத ஒரு விஷயம் அழாம இருக்கிறது, இன்னிக்கு நான் அழறதே கிடையாது, என்னால அழவே முடியாது, என் அம்மாவை நினைச்சிப்பேன் அந்தக் கஷ்டத்துக்கு முன்னாடி நான் படுறது என்ன கஷ்டம்னு நான் அழுததே இல்லை.
சரி விஷயத்துக்கு வர்றேன், உனக்கு டாக்டர்ஸ் ப்ளேன்னா என்னான்னு தெரியுமா தெரியாது. அது ஒரு குளிர்காலம்னு மட்டும் ஞாபகம் இருக்கும் இன்னும் கூட மழை பெஞ்சிக்கிட்டிருந்திருக்கலாம், நானும் ஜெவும் ஒரு பெட்ஷீட்டிற்குள் படுத்திருந்த ஞாபகம். நான் அப்ப வயசுக்கு வரலை, அவ உடம்பு என் மேல படுற சூடு என்னைத் தவிக்க வச்சது. நான் அவளோட வஜைனாவையும் அவ என்னோட வஜைனாவையும் பார்த்துப்போம், ஊசி போட்டுப்போம். ஊசின்னா ஊசி கிடையாது வெளக்கமாத்து குச்சி ஒன்னை எடுத்துக் குத்துறது. இப்படியெல்லாம் விளையாடியிருக்கோம். ரொம்பக் காலம் என்னை உறுத்தின விஷயம் இது, என் தங்கைய இப்படிச் செய்திட்டனேன்னு, உனக்குத் தெரியுமா தாஸ் இன்னைக்கு நினைச்சா அது கனவா இல்லை நிஜமா நடந்ததான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஆனா இதைப்பத்தி நான் அந்த வயசில நிறைய நினைச்சிருக்கேன். அதனால என்னால நிச்சயமா சொல்ல முடியும் கனவில்லைன்னு சொல்ல முடியும். ஆனா இதையெல்லாம் நான் வற்புறுத்தித்தான் ஜெவை செய்ய வச்சேன். இன்னிக்கு நானும் ஜெவும் அல்மோஸ்ட் லெஸ்பியனா இருக்கோம்னா அதுக்கு நான் தான் காரணம்னு எனக்கு மனசு உறுத்திக்கிட்டேயிருக்கு. ஆமாம் தாஸ், நான் உன்கூட ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி என்னையை ஒரு லெஸ்பியனாத்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் அழகா பொறக்கறதில் இருக்கற பிரச்சனை தெரியுமா தாஸ்? அது அத்தனையையும் நான் ஃபேஸ் பண்ணியிருக்கேன், வயசுக்கு வந்த ஒரு மாசத்துல ஒரு பையன் ‘உன் முலை ரொம்ப அருமையா இருக்கு, என் சுன்னியப் பார்க்கறியான்னு’ சொல்லி யாருமில்லாத ரோடொன்றில் ஜட்டியைக் கழட்டி காண்பிச்சான். நான் என்ன செய்திருக்க முடியும்னு நினைக்கிற, உதவாத அப்பன் ஒருத்தனை வைச்சிக்கிட்டு அம்மாகிட்ட சொன்னேன் அம்மாவாலையும் தான் என்ன பண்ணியிருக்க முடியும், மக்கள் நடமாட்டம் இருக்கற வரைக்கும் தான் என் நடமாட்டம்னு முடிவு செய்யறதைத் தவிர. என் கூடப்படிச்ச எனக்கு லவ்லெட்டர் கொடுக்காத பையனுங்களே கிடையாது, என் பின்னாடியே சுத்தறது, ஒரு பையன் பேரைச் சொல்லிக் கூப்பிடுறது இப்படின்னு வீட்டை விட்டு ரோட்டுக்கு வர்றதுன்னாலே பயந்த காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் வந்தா எந்தப் பையன் என்னைப் பின் தொடர்ந்து வருவான் எவன் லவ்லெட்டர் கொடுப்பான்னு தினம் தினம் பயந்து செத்திருக்கேன். வீட்டுல மட்டும் என்ன வாழ்க்கை அப்பல்லாம் எனக்கு துணையா இருந்தது ஜெ மட்டும் தான், அம்மாவுக்கு அப்பாகிட்ட அடிவாங்கவே நேரம் பத்தாது. எனக்கும் ஜெவுக்கும் ஒரு வருஷம் தான் வயசு வித்தியாசம். நான் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன், என்னோட ஆறுதலே அவ மட்டும் தான். சொல்லப்போனா அவளும் எங்கப்பனும் தான் ஒரு வைராக்கியமா என்னை ஜெயிக்க வைத்தது, இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்க நல்லா படிக்கிறதுதான்னு எங்களுக்கு சின்ன வயசிலேயே தெரிஞ்சிருந்தது. எங்கப்பன் எங்கம்மாவுக்குக் கொடுத்த டார்ச்சரால் நொந்து இருந்த என்னை எப்பவும் ஜெதான் தேத்துவா.
டாக்டர்ஸ் ப்ளேன்னு சின்னவயசில செக்ஸ் பத்திய மனப்பான்மை இல்லாம செய்வதைச் சொல்வாங்க, அதாவது விளையாட்டா ஆண் பெண் உறுப்புக்களைத் தொட்டுப் பார்க்குறது, ஆனால் எங்களுக்கு எது சரி எது தப்புன்னு சொல்லித்தர்ற நிலையில எங்கம்மா இல்லேங்கிறதால, நாங்க அதில் செக்ஸுவல் இன்டன்ஷன்ஸ் கொண்டு வந்துட்டோம் வயசுக்கு வந்ததுக்கு அப்புறம். எனக்கென்னமோ ஆண்களையே பிடிக்காமப் போயிருந்ததால் எனக்கு இதில் சம்மதம் இருந்தது, வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ஜெ தான் இதை ஆரம்பிச்சான்னாலும் அதற்கும் நான் தான் காரணம்னு இன்னமும் நினைக்கிறேன். எங்கப்பனோ இல்லை ஜட்டியைக் கழட்டி காண்பிச்சவனோ, எங்கப்பன் கடன் வாங்கிட்டு வரச்சொன்னப்போ மாரைக் கசக்கினவனோ இல்லாமல் நான் என்னையத்தான் இதற்கு காரணம்னு சொல்வேன். நான் சந்தோஷமாதான் இருந்தேன் இருக்கேன், அக்கா தங்கை லெஸ்பியனா இருக்கிறதைப் பத்திய கேள்விகள் எனக்குள்ள உண்டுன்னாலும் நானும் சரி ஜெவும் சரி ஒரு மாதிரி எங்களை இந்த அடலஸண்ட் காதல் கிட்டேர்ந்து இப்படித்தான் காப்பாத்திக்கிட்டோம், எங்களுக்கு நாங்களே ஒரு மாதிரி உதவி செய்திக்கிட்டோம்னு தான் நான் நினைக்கிறேன். ஊட்டி வர்றவரைக்கும் என் வஜைனாவிற்குள் எதையும் நுழைத்துக் கொண்ட நினைவில்லை. எனக்கு நான் லெஸ்பியனாங்கிற டவுட் இருந்துக்கிட்டேதான் இருந்தது, ஆனால் ஜெக்கு அப்படியில்லை. அவள் தான் ஒரு லெஸ்பியன்னு நம்பினாள். என் டவுட் என்னை என் கிளிட்டோரிஸை விட்டு கீழே நகர விடலை, ஜெவுக்கு அதிலும் விருப்பம் இருந்தது. அவள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ ஒரு டில்டோவைக் கூடப் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள், நான் மறுத்துவிட்டேன். என் உச்சத்தை கிளிட்டை நக்குவதால் மட்டுமே பெற்றுவந்தேன், ஜெவின் கைகளுக்குக் கூட அனுமதியில்லை. நான் என் முதல் உடற்சேர்க்கையின் பொழுது தான் ஹைமன் கிளியும் என்றே நினைத்தேன். அதனால் தான் அத்தனை பிரச்சனையும். சரி அதை விடுங்கள்.
நான் என்னை இப்படி ஒரு லெஸ்பியனாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நமது நட்பு உருவானது, எதனால் உன்னை எனக்கு இவ்வளவு பிடித்திருந்ததுன்னு தெரியாது. Love at first sight கிடையாது நம்முடையதுன்னு உனக்கும் தெரியும், நீ என்னைக் கன்வின்ஸ் செய்து கொண்டேயிருந்தாய் ஆனால் உன்னால் என் பாறைக்குள் நுழைய முடிந்திருந்தது. இஞ்ச் பை இஞ்சா உன்னால் என்னை நகர்த்த முடிந்தது. ஆரம்பத்தில் நான் நகர்ந்தேனான்னு தெரியாது ஆனால் உன்னுடனான சேட்டிங் என்னை நகர்த்தியது. மொத்தமாய் உன்னை நிராகரித்ததிலிருந்து, உன்னுடனான உரையாடல்களுக்கு ஒப்புகொண்டு, என் எல்லைகளுக்குள் நின்று கொண்டு செய்த பெற்ற விளக்கங்கள், எல்லைக்களைக் கடந்து இணையவெளியில் உலவியது, பின்னர் நேர்ப்பேச்சில் எல்லாம் பேச வைத்தது என நான் மாறிக்கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் இந்த மாற்றம் என்னிலிருந்த என் செக்ஸுவல் ஓரியன்டேஷனைப் பற்றிய கேள்வியை எழுப்பத் தொடங்கியது. உன்னுடனான பழக்கம் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் எல்லாம் நானும் ஜெவும் ஒன்றாகயிருந்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனால் என் லெஸ்பியன் நம்பிக்கையை மீறியும் என்னால் ஒரு ஆணுடன் உறவு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உன்னால் தான் வந்தது. ஆனால் சாதாரணமாய் வரவில்லை, கடைசி வரை என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் மீதான வெறுப்பு – என் அப்பனின் காரணமாய் – என்னை உன்னிடம் நெருங்க விடவில்லை. தோற்றுப் போவதன் வலி என்னை முயற்சி செய்ய விடவில்லை. ஆனால் செய்யச் சொன்னது ஜெதான்.
உன்னுடனான என் பழக்கம் ஜெவிற்கு தெரிந்துதானிருந்தது, பிடித்தும் தான். நான் ஜெவிடம் ரொம்பவும் டிபன்டன்ட் ஆக இருந்தேன், அதை அவள் வெறுத்தாள் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படியில்லாமல் இருந்தால் நன்றாகயிருக்குமென்று அவள் நினைத்திருக்கலாம். நான் லெஸ்பியனா என்பதைப் பற்றிய சந்தேகம் எனக்கு இருந்ததும் இருப்பதும் அவளுக்குத் தெரியும், ஒருவேளை நான் உன்னுடன் உறவு கொள்ள முடியாமல் போனால் ஒரு வகையில் என் செக்ஸுவல் ஓரியன்டேஷன் எனக்குத் தெரிய வாய்ப்பிருக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். நீ அவளுடன் புனே சென்ற பொழுது என்ன செய்தாயோ எனக்குத் தெரியாது, அவளுக்கு உன் மேல் நம்பிக்கை வந்ததும், என்னை உன்னிடம் டெஸ்ட் செய்து கொள்ளும் படியும் அவள், புனே சென்று வந்ததும் தான் சொன்னாள். அவள் சொன்னால் உன் உள்மன அளவிளாவது நீ ஒரு லெஸ்பியனா இல்லையா என்பது தெரிந்து தான் ஆகவேண்டும் என்றும், அதை உறுதி செய்யும் பல வழிகளில் இதுவும் ஒன்றென்றும், அவளுக்கு இது உதவியதுன்னும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் பிறகும் என்னால் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் காலம் கடத்தினேன் ஆனால் உன் டைரி நீ எவ்வளவு தூரம் என்னைக் காதலிக்கிறாய் என்பதைச் சொன்னது, அதன் ப்ராக்டிகல் தன்மை என்னை உன்னிடம் கொடுக்க இசைந்தது. ஆனாலுமே எனக்கு கடைசி வரை என்னால் ஒரு ஆணுடன் சந்தோஷமாய் இருக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இருக்க முடிந்தது என்னில் பல மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எனக்கு நான் உன்னிடம் அன்று முதல் முறையே அப்படி நடந்து கொண்டது – இரண்டாவது ஆர்கஸம் வரவழைக்க நான் செய்த அத்தனையும், முதல் தடவை தான் நீ வாயை வெச்சதும் வந்துடுச்சே – உனக்கு தவறா தெரிஞ்சிடுமோன்னு பயந்தேன். ஆனால் நீ என்னைப் புரிந்துகொண்டதாய் இதுவரைக்கும் நினைக்கிறேன்.
நீ என்னிடம் என் மாஸ்டர்பேஷன் பற்றிக் கேட்டதற்கான பதிலும் இந்தக் கடிதத்தில் இருக்கு. ஆமாம் நான் செய்திருக்கேன், செய்துக்கிட்டிருக்கேன் – நீ நம்ப கல்யாணத்துக்குப் பிறகு என்னை சேட்டிஸ்ஃபை செய்யலைன்னா செய்துப்பேன். கலாச்சாரம் பண்பாடு லெஸ்பியன் ஹோமோசெக்ஸுவல் பத்தியெல்லாம் நீ என்னுடன் சாட்டிங்கில் பேசியதை வைத்து உன்னைப் பற்றிய ஒரு அபிப்ராயம் எனக்கு இருக்கு. ஆனால் அது தவறாகவும் நான் தவறா புரிந்துகொண்டதாகவும் கூட இருக்க முடியும். உன்னை எதற்காக இல்லாட்டாலும் இதை நீ ஊருக்கெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்த மாட்ட என்கிற அளவி உன்னை நம்புகிறேன். மற்றதை நீ சொல்லித் தான் தெரிஞ்சிக்கணும். FYI என் அப்பன் செத்துப்போய் ஐஞ்சு வருசம் ஆகுது, நான் காலேஜ் படிக்கிறப்பவே தண்ணியடிச்சி ரோட்டில் அடிபட்டு செத்துப்போய்ட்டான். அம்மா ஊரில் இருக்காங்க நானும் என் தங்கையும் மட்டும் தான் இங்க இருக்கோம். என்னை நீ கல்யாணம் செய்துக்க முடியும்னா என் பக்கத்தில் இருந்து நான் என்ன செய்யணும்னு சொல்லு, இன்னொரு முக்கியமான விஷயம் இந்த லெஸ்பியன் விஷயத்தைத் தவிர்த்து என் தங்கை ரொம்ப நல்லவ, என் உயிரை விட மேலாதான் அவளை நினைச்சிக்கிட்டிருக்கேன் அதனால அவகிட்ட உன்னால மரியாதையா நடந்துக்க முடியாதுன்னா – I mean எப்படி சொல்றதுன்னு தெரியலை உனக்கு எப்படிப் படுதோ அப்படி வைச்சிக்கோ – இப்பவே சொல்லிடு.
என்கிட்ட இதைப்பத்தி நேரிலோ, போனிலோ இல்லை சாட்டிங்கிலோ நீ பேசலாம் எல்லாவற்றுக்கும் தயாரா இருக்கேன்.
அகிலம்.
நான் படித்து முடித்து நிறைய நேரம் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
___________________________________________________________________
இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் என் கதையொன்றின் இன்னொரு பக்கம்.
தொடர்புடையது – மலரினும் மெல்லிய காமம்

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?
சுஜாதாவின் மேற்கண்ட கேள்வியை முன்வைத்து கணையாழி கடைசி பக்கங்களில் எழுதியதை முன்னமே கூட ஒரு முறை பட்டியலிட்டிருக்கிறேன், புத்தக விமர்சனம் வைக்கிறேன் பேர்வழியென்று.
“தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன” மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.
“தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.
அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள…
மேலே ‘திருப்புகழில்’ தேடிக்கொள்ளவும்.”என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.
சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.
“தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.
‘மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்’என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno.”
ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.
“இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?”
கணையாழி கடைசி பக்கங்கள் பதிவில் இங்கே எழுதியிருந்தேன்.
—————————–
முன்னமே கூட தமிழ் சிஃபியில் ‘முலைகள்’ பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. கட்டுரை எழுதியவரைப் பற்றி மறந்து போய்விட்டது ஆனால் முலைகளின் வித்தியாசமான தோற்றங்களைப் பற்றி பேசியது அந்தக் கட்டுரை. தமிழ் சிஃபி அப்பொழுது யுனிக்கோடில் இல்லை, இப்பொழுது மாற்றிக் கொண்டிருந்தார்கள் மாற்றிவிட்டார்களா தெரியாது, மாற்றினால் ஒரு முறை தேடிப் பார்க்கலாம்.
தேடிப்பார்த்து கிடைத்தது. இங்கே
எப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று*(இல்லை அதை ஒத்த ஒன்று – நினைவில் இருந்து எழுதுகிறேன்.) ஏனென்றால் அதைப் பற்றிய குறிப்பே இலக்கியத்தில் இல்லை என்று சொல்லியோ என்னவோ, தமிழ் இலக்கியத்தில் அத்தனை தூரம் பரீட்சையம் இல்லாதவன் நான். முலைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் அளவிற்கு ஆண்குறிகள் பற்றிய குறிப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.
——————————
நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய பொழுது ஒரு வழக்கத்திற்காகவே கொஞ்சம் ‘செக்ஸியாக’ எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் நண்பர் ஒருவர் ‘ரமணி சந்திரன்’ கதை போல இருக்கிறது என்று சொல்ல, அதை விட உத்வேகம் ஒன்று வேண்டுமா அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
——————————-
‘அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931][அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும் முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]
இப்ப ஜெயமோகன் புகுந்து விளையாடுறாரு, அவருடைய காடு மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்பதால் புதிதாகத் தெரியவில்லை என்றாலும். ரொம்ப நாட்களாய் மனதிற்குள் ஊறிக்கொண்டிருந்த கம்ப ராமாயணம் படிக்கணும் என்ற ஆசையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெமோவின் கம்பனும் காமமும்…
——————————-
இதே போல R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார், அதில் சௌந்தர்யலஹரி பற்றி சொல்கிறார் இப்படி,
‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி ‘
இவருடைய Carnal Thoughts தமிழில் ஒரு நல்ல ஃபோர்னோ முயற்சி என்றே நினைக்கிறேன்.
பார்ப்போம்.
* – நன்றி அருட்பெருங்கோ

Asin – Vogue Magazine Images
Rosario Dawson – Images – Capitol Magazine
Anne Hathaway – In Style – July
Miranda Kerr – Mens Style – Images
Shreya – Vogue Magazine Image
ஒஸ்தி
தபாங் முதல் பார்த்தவன் என்கிற முறையிலும் சிம்புவின் பெரும்பாலான படங்களைப் பார்த்தவன் என்கிற முறையிலும் என் ஒஸ்தி பற்றிய எதிர்பார்ப்பை, அது எப்படி வந்து தொலையும் என்ற என் எரிச்சலையும் பதிவு செய்யலாம் என்று ஆசை.
பொதுவாய் எனக்கு ரீமேக் படங்களின் மீதான நம்பிக்கை அதிகம் உண்டு, உலக அளவில் அருமையான படத்தை இன்னும் அருமையாய் ரீமேக் செய்கிறார்கள். தமிழிலிருந்து இந்திக்கோ இல்லை இந்தியில் தமிழிற்கோ செய்த ரீமேக் படங்கள் மட்டும் படு மொக்கையாய் இருந்துத் தொலைக்கிறது. Pride and Prejudice என் இந்த அருமை வகைக்கு உதாரணம், எத்தனை எத்தனை மாதிரியா Jane Austinன் இந்தக் கதையை எடுத்துவிட்டார்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையானவை. Aishwarya நடித்ததை நான் பார்க்கலை. Jane Eyreன் BBC டெலிவிஷன் சீரிஸ் தான் இதுவரையிலும் அருமை என்று நினைத்துவந்தேன். தற்சமயம் வந்த Jane Eyre படம் இன்னும் subtle ஆக எடுக்கப்பட்டிருந்தது.
தபாங் எனக்குப் பிடித்திருந்தது, ஸ்விஸில் இருந்து இந்தி சினிமாவை ஒரு வட இந்திய வில்லேஜிற்கு நகர்த்திய பெருமை தபாங் பட இயக்குனருக்கு உண்டு. படம் simpleton என்றாலும் அதன் tone எனக்குப் பிடித்திருந்தது, Anurag Gashyapன் சகோதரர் அல்லவா. சல்மானின் நிறைய படங்கள் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரின் மேனரிஸங்கள் நடை உடை பாவனை பிடித்திருந்தது, டைரக்டரின் பங்கு அதிகமிருந்திருக்கவேண்டும்.
இந்தப் படத்தை எப்படி எடுத்துத் தொலையைப் போறானுங்களோ என்கிற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. சிம்புவின் எது பிடிக்கிறதோ இல்லை அவருடைய பாடல்களைப் படமாக்கும் விதம் எனக்குப் பிடிக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு ஒரு அற்புதம். அற்புதங்கள் எப்பொழுதாவது நடந்தால் தான் அற்புதம், இல்லையென்றால் அதன் மதிப்பு இல்லாமல் போய்விடும். டைரக்டர்களின் மதிப்பு இப்படித் தான் தெரிய வருகிறது, டாப்ஸியின் வந்தான் வென்றான் பார்த்துவிட்டு வாந்தியே வந்துவிட்டது. அத்தனை அசிங்கமாய் இருந்தாள் அந்தப் படத்தில். ஆடுகளத்தில் நடித்தவளா(சாரி வேற மாதிரி சொல்ல முடியாது) இவள் என்கிற எண்ணம் வராத பொழுதில்லை வந்தான் வென்றான் பார்த்த பொழுது.
ஒஸ்தி நன்றாக வரக்கூடாதென்பது என் எண்ணமல்ல, நான் சூடு கண்ட பூனை, என்னால் அப்படித்தான் பார்த்துத் தொலைய முடிகிறது.

பார்ட்டியொன்றில் பார்த்த போட்டோஜெனிக் பெண் அல்லது ம.செ ஓவியம்
கம்பெனியின் பார்ட்டி ஒன்றிற்காக, ஹோட்டல் இஷ்டாவிற்கு சென்றிருந்த பொழுது அங்கே நடனம் ஆடுவதற்காக வந்த இந்தப் பெண் பார்க்க ம.செ ஓவியம் போலவே இருந்தாள்.
ம.செ ஓவியங்களின் மீது எனக்கு ஒரு கண் உண்டு.
“உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.”
இது என் முதலிரவு கதையில் வரும் வசனம்.
படங்கள் ‘ப்ளாஷ்’ உபயோகித்தும் பார்டிக்கான மென் வெளிச்சத்தில் எடுத்ததாலும் எனக்கு பிடித்தமானவைகளாக இல்லை தான். ஆனால் அந்த பெண்ணிற்காக போட்டிருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். –சிவாஜியை இழிவுபடுத்தினாரா ஜெயமோகன்?
”ஜெயமோகன் ப்ளாக் எழுதுறாரே… படிச்சீங்களா?”
எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பூ தான் இலக்கிய வட்டாரத்தின் சமீபத்திய பரபரப்பு. சர்ச்சைக்கும் ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு பந்தம். ‘கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!’ என்பது தொடங்கி, ‘பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!’ என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை. ‘இனிமேல் எழுதுவதில்லை’ என அறிவித்துவிட்டுக் கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்த ஜெயமோகன், வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததும் வெடிக்கத் தொடங்கிவிட்டது சர்ச்சை சரவெடி!
கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சக இலக்கிய வாதிகள் தொடங்கி பெரியார், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பிரபலங்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ஜெயமோகன்.
‘என் தலைமுறையின் நோக்கில் அவர் (பெரியார்) சமூக இயக்கத்தின் உட்சிக்கல்களையும், மனித மனத்தின் ஆழத்தையும், அதில் மரபு ஆற்றும் பங்கையும் உணராத பாமரர்தான். இன்றும் ஈ.வே.ரா. பற்றி எனக்குச் சாதாரணமான ஒரு மரியாதை மட்டுமே உள்ளது…’, ‘அவருக்குச் சமூகச் சீர்திருத்த நோக்கம் இருந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், அவரை நான் ஒரு சிந்தனையாளராகவோ, அறிஞராகவோ, எண்ணவில்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாத அவரை தமிழ்ப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் தீர்மானிக்கும் ‘நபி’ போல சித்திரிக்கும் இன்றைய போக்குகள் மிக ஆபத்தானவை’ என்றெல்லாம் பெரியார் பற்றி போகிற போக்கில் இவர் உதிர்க்கும் விமர்சனங்கள் வலைப்பூ முழுக்க விரவிக்கிடக்கின்றன.
எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் தனித் தனிப் பதிவுகள். எம்.ஜி.ஆருக்குத் ‘தொப்பி’, சிவாஜிக்குத் ‘திலகம்’ என்ற தலைப்புகளுடன். ‘அப்படி இவருக்கு அந்த இரண்டு சகாப் தங்களின் மீது என்னதான் பகை?’ என்று படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அள வுக்கு வயது, உடல் நலப் பாதிப்பு ஆகியவற்றைக்கூட விடாப் பிடியாகக் கிண்டலடிக்கிறது ஜெயமோகனின் எழுத்துக்கள். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் நாம் எடைபோட…
‘தொப்பி’
‘எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.
அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.
லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது… கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது… இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!
எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக ‘அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!’ என்றுதானே அவர் சொல்கிறார்.
எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. ‘ஆண்ட வன் உலகத்தின் முதலாளி… அவனுக்கு நானொரு தொழி லாளி!’ அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் ‘கஞ்சியிலே’ என்று திருத்தினேன். அப்படியானால் ‘படித்தேன்’ தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ”அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க…” என்றார்.
எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்… ‘உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.’ ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, ‘படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை’ என்று. அதேபோல காதல் வசனங்கள்… ”கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.” பொன்மொழிகளும் சிக்க லானவை… ‘தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!’ தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? ‘அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.’ எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.
ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை ‘எங்க வீட்டுப் பிள்ளை’ தான்!’
‘திலகம்’
‘…சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.
சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். ‘அவன்தான் மனிதன்’ என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். ‘வைக்கோலு பிடுங்கு கான்’ என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. ‘சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே… அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?’…
உச்சம் ‘திரிசூலம்’. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்…
உச்சகட்ட நடிப்பு… ‘பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன…’ என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. ‘தென்னாட்டு மார்லன் பிராண்டோ’ என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.’
நம் குறிப்பு: தமிழ் வலைப் பூக்களில் இரண்டு பக்கங்கள் உள்ளன. நல்ல கதை, கவிதைகள், ஆரோக்கியமான விவாதங்கள் ஒரு பக்கம்; பெயரை மறைத்துக்கொண்டு எழுதும் வசதி, கட்டற்ற சுதந்திரம், சென்ஸார் இல்லாதது போன்றவற்றால் எதை வேண்டுமானாலும் மனம் போன போக்கில் எழுதலாம் என்ற பொறுப்பின்மை இன்னொரு பக்கம். இந்த இரண்டாம் பக்கத்தில் ஒரு பொறுப்பான எழுத்தாளர் தன் அடையாளங்களைச் சொல்லி… அதே சமயம் தன் ஆவேசத்தை நியாயப்படுத்தக் காரணங்களும் சொல்லாமல் இப்படி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது?
நன்றி ஆனந்தவிகடன்.
இதற்கு ஆனந்தவிகடன் அவதூறு என்று ஜெயமோகன் எழுதியது. கீழே
———————————
ஆனந்தவிகடனின் அவதூறு February 14, 2008 – 5:16 pm
ஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா?’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு.
இந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்.
இதில் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து உள்நோக்கம் கற்பித்து நுண்ணுணர்வோ நகைச்சுவையுணர்வோ இல்லாத கும்பலை வன்முறை நோக்கி தூண்டி விடும்படியாக ஆனந்த விகடன்வெளியிட்டுள்ள இந்த கட்டுரை சற்று எதிர்பாராத ஒன்று. விகடன் பொதுவாக இம்மாதிரி சிண்டுமுடியும் வேலைகளைச் செய்வதில்லை. இதன் பின்னால் வன்மம் கொண்ட நோக்கம் உள்ளது
ஆனால் எதிர்பார்க்கத்தக்க விஷயம், கருத்துச் சுதந்திரம், புனித பிம்பங்களை கட்டுடைத்தல், அங்கதம் என்றெல்லாம் பேசி வரும் தமிழ் சிற்றிதழாளர்களிடமிருந்து சிறு எதிர்ப்போ கண்டனமோகூட இம்மாதிரி ஒரு வெளிப்படையான தூண்டிவிடுதலுக்கு எதிராக கிளம்பாது என்பது. வன்முறை நிகழ்ந்தால்கூட அதைக் கொண்டாடவே செய்வார்கள்
முற்றிலும் எதிர்பார்க்க முடியாத விஷயம் விகடன் என் மறுப்பை பிரசுரிக்கும் என்பது. பிரசுரித்தால்கூட ஒருசில சம்பந்தமில்லாத வரிகளை படத்துடன் அச்சிட்டு வைப்பார்கள்
ஆகவே விகடனுக்கு நான் அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
மதிப்பிற்குரிய ஆனந்த விகடன்ஆசிரியருக்கு
விகடன் பெப் 14-21 இதழில் என் இணையதளம் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரை படித்தேன்.
என் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகளில் நமது பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையுமே அங்கதமாக விமரிசனம் செய்திருக்கிறேன். என் இலக்கிய ஆசிரியர்கள், தீவிர இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், சக படைபபளிகள், என் சாதி, மதம், குடும்பம் என எதுவுமே அதிலிருந்து தப்பவில்லை– அப்படித்தான் திரைப்படமும். இது இன்றைய எழுத்தின் ஒரு இயல்பாகும். இன்று இந்த அம்சம் திரைபபடங்கள் வரை வந்துள்ளது– இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ ஓர் உதாரணம். அது அங்கே ஒரு மாபெரும் வெற்றிபப்டம்.
இதை எதையுமே பொருட்படுத்தாமல் சில பகுதிகளை பிய்த்துப்போட்டு உள்நோக்கம் கற்பித்து எழுதபப்ட்டுள்ள தங்கள் கட்டுரை. வன்முறையை தூண்டும் உள்நோக்கம் கொண்டது. ஆபத்தானது.
கருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச்ச்செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை
அன்புடன்
ஜெயமோகன்
——————————————————–

தேடல் சொற்கள்
என் பதிவிற்கு இதைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆச்சர்யமாகவே இருக்கிறது.
கதைகள் | 47,227 |
முதலிரவு கதைகள் | 9,677 |
anne hathaway | 7,202 |
monica bellucci | 6,803 |
cameron diaz | 5,621 |
பாலியல் கதைகள் | 5,348 |
emma watson | 5,318 |
miranda kerr | 3,550 |
jessica alba | 1,835 |
jessica biel | 1,772 |
penelope cruz | 1,579 |
அடல்ஸ் ஒன்லி கதைகள் | 1,529 |
keira nightly | 1,376 |
பணம் சம்பாதிப்பது எப்படி | 1,327 |
eva mendes | 1,178 |
asin | 1,159 |
miranda kerr topless | 1,128 |
அகிலா | 1,066 |
புறநானூறு | 1,049 |
katharine mcphee | 948 |
குளித்துவிட்டு வந்து | 764 |
bar rafaeli | 706 |
ஜெயமோகன் | 696 |
scarlett johansson | 678 |
அக்கா பால் | 675 |
அன்னிக்கு நான் | 654 |
செக்ஸ் காம சிறு கதைகள் | 619 |
ராத்திரி நான் | 597 |
அடல்ஸ் ஒன்லி | 587 |
shakira | 540 |
சிவாஜி | 533 |
தாஜ்மஹால் | 520 |
kira nightly | 516 |
நயனதாரா | 500 |
bellucci | 432 |
monica belluci | 422 |
keira knightley | 417 |
சேர மன்னர்களை | 346 |
shreya | 337 |
கதைகளை | 317 |
உடலுறவு கொள்வது | 303 |
katherine mcphee | 293 |
ஹாலிவுட் | 293 |
அக்காவுடன் தப்பாக | 262 |
uhq | 249 |
babes | 238 |
வயசுக்கு வந்த | 232 |
கதை | 229 |
காதல கதைகள் | 229 |
ann hathaway | 223 |
கம்பெனியில் வேலை | 222 |
ராணி | 222 |
சோழ வரலாறு | 220 |
தபூ சங்கர் | 219 |
சித்தன்னவாசல் | 213 |
site:usemycomputer.com anne hathaway | 209 |
கி ராஜநாராயணன் | 201 |
காமக் கதைகள் | 196 |
பிரமிள் | 194 |
கணையாழி | 185 |
தமிழ் செக்ஸ் காம சிறு கதைகள் | 183 |
அம்மாவின் சினேகிதி | 180 |
topless | 175 |
கி | 171 |
உடலுறவுக் காட்சிகள் | 171 |
penolope cruz | 166 |
அக்கா தம்பி | 164 |
முதலிரவு | 162 |
penelope cruz mango | 155 |
rosario dawson | 153 |
eva mendez | 153 |
paris hilton | 153 |
“monica bellucci” | 152 |
சிவாஜி எம் ஜி | 152 |
kundavai | 148 |
monica belucci | 146 |
asin vogue | 145 |
bodri krisztina | 144 |
உடலுறவு கொள்ளும் | 144 |
தேவிடியாள் | 140 |
jessica alba campari | 139 |
rosario dawson images | 137 |
நச்சுன்னு இருக்கு | 137 |
மன்னர்கள் பற்றியும் அவர்கள் | 137 |
மறைவாய் சொன்ன கதைகள் | 136 |
sreya | 136 |
தமிழ் செக்ஸ் ஸ்டோரி | 125 |
அன்னிக்கு | 125 |
evil women | 122 |
“emma watson” | 117 |
site:usemycomputer.com penelope cruz | 116 |
அன்னி கதை | 116 |
“anne hathaway” | 114 |
ராஜராஜ சோழன் | 113 |
bar refaeli | 110 |
play boy | 110 |
அக்கா பையன் | 109 |
shakila | 107 |
ஜாவா | 105 |
அக்கா தங்கச்சி | 104 |
கம்பெனியில் | 104 |
சோழ | 104 |
site:usemycomputer.com cameron diaz | 104 |
அக்கா தொடை | 104 |
பணம் சம்பாதிப்பது | 103 |
campari | 103 |
victoria beckham | 103 |
நீலகண்ட சாஸ்திரி | 101 |
site:usemycomputer.com | 100 |
சொன்ன | 100 |
evil woman | 99 |
“cameron diaz” | 99 |
நீல படம் | 95 |
செக்ஸ் கதைகள் | 93 |
hathaway | 92 |
penélope cruz | 92 |
site:usemycomputer.com jessica biel | 89 |
தமிழ் கதைகள் | 88 |
site:usemycomputer.com monica bellucci | 87 |
சித்தன்ன வாசல் | 87 |
வைரமுத்து | 86 |
பையன் கூட | 83 |
தாஜா பண்ணி | 83 |
monica cruz | 83 |
kiera nightly | 81 |
முலை | 81 |
காதல் கதை | 80 |
காமப் படங்கள் | 79 |
ஸெக்ஸ் | 79 |
அத்தை கதைகள் | 78 |
கங்கை கொண்ட சோழபுரம் | 76 |
தமிழ் காமக் கதைகள் | 76 |
ராஜநாராயணன் | 76 |
மோகனா | 74 |
தமிழ் செக்ஸ் கதைகள் | 74 |
குலோத்துங்க சோழன் | 73 |
என்று சொல்லி | 73 |
adrina lima | 72 |
மார்பின் மீது | 72 |
anna hathaway | 72 |
கல்யாணம் முடிந்து | 71 |
site:usemycomputer.com jessica alba | 71 |
விபச்சாரம் செய்து | 71 |
பாலியல் கதை | 69 |
காமமும் | 69 |
“miranda kerr” | 68 |
தம்பி தங்கைகள் | 68 |
சோழர் காலம் | 67 |
“jessica biel” | 66 |
playboy | 66 |
\”anne hathaway\” | 65 |
உடையார் பாலகுமாரன் | 63 |
சோழர்கள் | 62 |
அம்மாகிட்ட | 61 |
கி.ராஜநாராயணன் | 61 |
என் பெயர் ராமசேஷன் | 60 |
petro nemcova | 58 |
eva mendes campari | 58 |
காமம் | 58 |
krisztina bodri | 58 |
whipped women | 57 |
மோகமுள் | 56 |
hillary duff | 55 |
அள்ள அள்ள பணம் | 55 |
அத்தையுடன் | 55 |
செப்புப்பட்டயம் | 55 |
ஓவியம் | 54 |
anne hathaway filterui:imagesize-large | 53 |
site:usemycomputer.com eva mendes | 53 |
அவள் மீது | 52 |
monica bellucci images | 52 |
keira | 52 |
எம் ஜி ஆர் | 52 |
ரேஷ்மா | 52 |
ராஜராஜனின் | 51 |
செக்ஸ் | 51 |
schlampe | 50 |
குளித்து | 50 |
கிருமி கண்ட சோழன் | 50 |
sherya | 50 |
diaz | 49 |
காதல் கதைகள் | 49 |
அம்மாவின் | 48 |
spanish babes | 47 |
சாரு | 47 |
biel | 47 |
%u0bae%u0bc1%u0ba4%u0bb2%u0bbf%u0bb0%u0bb5%u0bc1 %u0b95%u0ba4%u0bc8%u0b95%u0bb3%u0bcd | 47 |
உடலுறவுக் கதைகள் | 46 |
“jessica alba” | 46 |
kundavai.wordpress.com | 45 |
annasophia robb | 45 |
petra nemcova | 44 |
சாரு நிவேதிதா | 44 |
rajini | 44 |
campari calendar | 43 |
ஓவியங்கள் | 43 |
சோழர் கி பி | 42 |
கற்பழிப்புக் கதைகள் | 42 |
காம கதைகள் | 42 |
serya | 42 |
பெண்ணின் அழகு | 41 |
புலிநகக் கொன்றை | 41 |
anne hathaway images | 41 |
சிவாஜியை | 41 |
sports illustrated swimsuit | 41 |
படங்கள் | 40 |
பெண் | 40 |
தமிழனின் வரலாறு | 40 |
mary i | 39 |
பெயர் | 39 |
\”emma watson\” | 39 |
காதல்கதைகள் | 38 |
சோழப் பேரரசு | 38 |
அக்கா சொன்ன | 37 |
வலைத்தளத்தில் | 37 |
mango penelope cruz | 37 |
உடலுறவு கொள்ள | 37 |
queen mary 1 | 37 |
அன்னிக்கு ஒரு | 36 |
related:storytamil.bloghi.com/ | 36 |
அனிமல் | 36 |
penelope cruz images | 36 |
ganga rudraiah | 36 |
கதைகள | 36 |
emma watson filterui:imagesize-large | 35 |
mango penelope | 35 |
செக்ஸ் கதை | 35 |
கோவில்கள் | 35 |
நல்ல காதல் கதை | 35 |
இன்செஸ்ட் | 34 |
monica bellucci la riffa | 34 |
\”monica bellucci\” | 33 |
காதல் கதையை | 33 |
பகுத்தறிவு என்றால் | 33 |
காஷ்மீர் வரலாறு | 33 |
“eva mendes” | 33 |
female serial killers | 32 |
emma watson pictures | 32 |
scarlet johansson | 32 |
செக்ஸ் பற்றிய | 32 |
alessandra ambrosio | 32 |
emma-watson | 31 |
scarlet johanson | 31 |
cameron | 31 |
ராஜராஜன் | 31 |
mcphee | 31 |
சரோஜாதேவி புத்தகம் | 31 |
அம்மாவிடம் | 31 |
செக்ஸ் ஸ்டோரி | 31 |
குடுமியான்மலை | 31 |
egotastic | 31 |
அழகான பெண் | 31 |
kundavai.wordpress | 30 |
anne hathaway pictures | 30 |
ரோட்டில் | 30 |
queen mary i | 30 |
தமிழ் செக்ஸ் காம கதைகள் | 30 |
போர்னோ | 30 |
காஷ்மீர் | 30 |
தேவிடியா | 30 |
பஸ்ஸில் வந்த | 30 |
யூரின் | 30 |
காதல் | 29 |
முத்தம் கொடுத்தேன் | 29 |
site:usemycomputer.com katherine mcphee | 29 |
பணம் சம்பாதிக்கும் | 29 |
\”jessica biel\” | 29 |
penelope mango | 28 |
செந்தழல் ரவி | 28 |
ஆதித்த கரிகாலன் | 28 |
queen mary 1st | 27 |
சினிமா | 27 |
மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது | 27 |
பிரமிள் கவிதைகள் | 27 |
vikatan | 27 |
அக்கா பையனின் | 27 |
belsen | 26 |
a ஜோக்குகள் | 26 |
site:usemycomputer.com campari | 26 |
இட்லிவடை | 26 |
பாலியல் | 26 |
“katharine mcphee” | 26 |
கி. ராஜநாராயணன் | 26 |
keira knightley short hair | 25 |
penelope | 25 |
adriana lima | 25 |
பாலகுமாரன் | 25 |
ஸ்ரேயா | 25 |
site:usemycomputer.com katharine mcphee | 25 |
penolope | 24 |
cameron dias | 24 |
சரோஜாதேவி கதைகள் | 24 |
alba | 24 |
usemycomputer | 24 |
கதை ஒரு | 24 |
வைரமுத்துவின் காதல் கவிதைகள் | 23 |
“penelope cruz” | 23 |
christina ricci | 23 |
கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக | 23 |
kerr topless | 23 |
helen slater | 23 |
யோனியின் | 23 |
கரிகாலன் | 23 |
தொடர்கதை | 23 |
related:www.kamalogam.com/new/ | 23 |
இன்வெஸ்ட் | 23 |
emma watson images | 23 |
campari girl | 22 |
மதுமிதாவை | 22 |
thich quang duc | 22 |
hayden panettiere | 22 |
related:www.kamalogam.org/forum/archive/index.php/f-5.html | 22 |
monica bellucci pics | 21 |
jessica alba hot | 21 |
cruz mango | 21 |
swimsuit | 21 |
charlize theron nude | 21 |
பணம் | 21 |
தமிழ் செக்ஸ் | 21 |
எம்.ஜி.ஆர் | 21 |
தமிழ் பாலியல் கதைகள் | 21 |
terabithia | 21 |
விஜயநகரம் நாயக்கர் ஆட்சியில் தமிழகம் | 21 |
monika bellucci | 20 |
சோழ மன்னர்கள் | 20 |
miranda-kerr | 20 |
belle gunness | 20 |
முத்தம் கொடுத்தாள் | 20 |
குளித்துவிட்டு | 20 |
samantha lewis | 20 |
bellucci monica | 20 |
அண்ணாவின் | 20 |
vera farmiga | 20 |
charlize theron | 20 |
விஜய் படத்தில் | 19 |
related:kaamalogam.blogspot.com/ | 19 |
جيسيكا البا | 19 |
பெண்ணுடன் உறவு | 19 |
most evil | 19 |
site:usemycomputer.com uhq | 19 |
bridge to terabithia | 19 |
rani | 19 |
முலைகள் | 19 |
laurita | 19 |
பெரியம்மாவின் | 19 |
சிற்ப | 19 |
mónica bellucci | 19 |
பாலியல் படங்கள் | 19 |
மனிதநேயத்தை | 19 |
scarlett | 19 |
ரமணி சந்திரன் | 19 |
கொங்கை | 19 |
\”miranda kerr\” | 18 |
பாலகுமாரன் நாவல்கள் | 18 |
\”katharine mcphee\” | 18 |
miranda kerr toples | 18 |
உடையார் | 18 |
கோயிலொழுகு | 18 |
“scarlett johansson” | 18 |
ரமேஷ் பிரேம் | 18 |
ஒஸ்தி | 18 |
jessica alba images | 18 |
%u0baa%u0bbe%u0bb2%u0bbf%u0baf%u0bb2%u0bcd %u0b95%u0ba4%u0bc8%u0b95%u0bb3%u0bcd | 18 |
eva mendes campari calendar | 18 |
bitch of buchenwald | 18 |
mango cruz | 18 |
ரோட்டில் | 17 |
விஜய் | 17 |
சம்பாதிப்பது எப்படி | 17 |
சிவசங்கரி | 17 |
ஜொள்ளு | 17 |
தமிழ் கதை | 17 |
stranger-hillary duff lyrics | 17 |
குளியலறையில் | 17 |
“bar rafaeli” | 17 |
பாலகுமாரன் கதைகள் | 17 |
ஆன்ட்டி | 17 |
young cameron diaz | 17 |
queen mary of england | 17 |
பறவைகள் | 17 |
அவள் | 17 |
றஞ்சனி | 16 |
topless babes | 16 |
cameron diaz photos | 16 |
anne hathaway photos | 16 |
கதைகள் பேசி | 16 |
மாமியாருடன் முதலிரவு | 16 |
asin photos | 16 |
eva mendes images | 16 |
தமிழ் செக்ஸ் கதை | 16 |
mary 1 | 16 |
கனிமொழி | 16 |
xxx கதைகள் | 16 |
முதலிரவு கதை | 16 |
கட்டபொம்மன் படத்தில் | 16 |
காமக் கதை | 15 |
miranda | 15 |
cameron diaz uhq | 15 |
அக்கா | 15 |
spainish babe | 15 |
அக்காவும் அம்மாவும் | 15 |
பால் அக்கா | 15 |
அக்காவின் பால் | 15 |
அவளின் உடல் | 15 |
monica bellucci fotos | 15 |
emma watson photos | 15 |
தமிழில் | 15 |
photos | 15 |
monica bellucci photos | 15 |
அழகான பெண்கள் | 15 |
моника беллуччи | 14 |
nadia oh | 14 |
ஆண் | 14 |
site:http://usemycomputer.com | 14 |
jessica alba photos | 14 |
lyrics-stranger-hillary duff | 14 |
kundavai wordpress | 14 |
monica bellucci filterui:imagesize-large | 14 |
ஜெயஸ்ரீ | 14 |
site:usemycomputer.com campari alba | 14 |
campari eva mendes | 14 |
vogue magazine | 14 |
campari jessica alba | 14 |
anne hathaway pics | 14 |
முதலிரவு படங்கள் | 14 |
ana beatriz barros | 14 |
சித்தன்னவாசல் ஓவியம் | 14 |
diaz cameron | 14 |
அம்மா அக்கா | 14 |
சுஜாதா | 13 |
வைரமுத்து கவிதைகள் | 13 |
மசாலாப்படம் | 13 |
shreya vogue | 13 |
சோழ பாண்டிய பல்லவ | 13 |
இராஜராஜ சோழன் | 13 |
சோழன் | 13 |
அவளால் தாங்க | 13 |
“katherine mcphee” | 13 |
அடல்ஸ்+ஒன்லி+கதைகள் | 13 |
site:usemycomputer.com “jessica alba” | 13 |
cameron diaz young | 13 |
குனிந்து கொண்டாள் | 13 |
பெண்ணியம் | 13 |
eva mendes photos | 13 |
ஜெயகாந்தன் | 13 |
அக்காவும் | 13 |
மீனாவிடம் | 13 |
%u0b85%u0b9f%u0bb2%u0bcd%u0bb8%u0bcd %u0b92%u0ba9%u0bcd%u0bb2%u0bbf %u0b95%u0ba4%u0bc8%u0b95%u0bb3%u0bcd | 13 |
தபூ சங்கர் காதல் கவிதைகள் | 13 |
அன்னி கதைகள் | 13 |
kundavai site:wordpress.com | 13 |
அக்காவுடன் | 13 |
scarlet johansen | 13 |
கிங் மேக்கர் | 13 |
திருப்பதி மொட்டை | 13 |
அம்மா கதைகள் | 12 |
miranda kerr pics | 12 |
அறிவியல் | 12 |
most evil women | 12 |
harry potter emma watson | 12 |
உடலுறவு | 12 |
women in history | 12 |
அவளுடைய அம்மா | 12 |
தமிழன் வரலாறு | 12 |
mary ann cotton | 12 |
adriana lima topless | 12 |
nazi women | 12 |
மச்சினி | 12 |
defloration | 12 |
emma watson feet | 12 |
பன்னிரெண்டாம் வகுப்பு | 12 |
whipped woman | 12 |
பணம் கிடைக்க | 12 |
mango penolope cruz | 12 |
site:usemycomputer.com hayden panettiere | 12 |
கங்கைகொண்ட சோழபுரம் | 12 |
வைணவர்கள் | 12 |
கடல் | 12 |
கிளி ஜோசியம் | 12 |
monica bellucci filterui:face-portrait | 12 |
penelope cruz for mango | 12 |
asin filterui:imagesize-large | 12 |
irma grese | 11 |
அயர்லாந்து | 11 |
செம்பியன் மாதேவி | 11 |
harry potter girls | 11 |
வளர்மதி | 11 |
போர்னோகிராஃபி | 11 |
jessica watson | 11 |
miranda kerr pictures | 11 |
அம்மா மகன் இன்செஸ்ட் கதைகள் | 11 |
தமிழ் காம கதைகள் | 11 |
மீன் | 11 |
nguyen ngoc loan | 11 |
monica | 11 |
monica-bellucci | 11 |
campari alba | 11 |
“paris hilton” | 11 |
